search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு
    X

    மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு

    • மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிலங்களை கையகப்படுத்தியது.இதையடுத்து நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும் வீடுகள் கட்ட முடியாமல் சில வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களுக்கு அந்தந்த நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் அனல் மின் திட்ட தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்து கிருஷ்ணன், ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ் மற்றும் செந்தில்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.




    Next Story
    ×