search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal boyfriend arrest"

    கொரட்டூரில் பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    வில்லிவாக்கம்:

    ஓட்டேரி, பாயம்மாள் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது 39). கணவரை இழந்த இவருக்கும் கொரட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தங்கராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் கொரட்டூர் பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் தேவியின் நடத்தையில் தங்கராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து வந்து தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இதே போல் நேற்று நள்ளிரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தங்கராஜ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தேவி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், மண்எண்ணையை தேவி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக தேவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது நடத்தையில் சந்தேகம் அடைந்த தங்கராஜ் மண்எண்ணை ஊற்றி உயிரோடு எரித்தார்” என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து தங்கராஜை போலீசார் கைதுசெய்தனர். அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவி கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

    பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரத்தில் 6 வயது மகனின் வாக்குமூலத்தால் தந்தையை கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தம்போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.

    அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார்.

    இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது ராக்கியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார்.

    இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

    அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது கள்ளக்காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.

    வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிவிட்டு ராக்கி கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    அந்த நேரம் வினோத் வீட்டிற்கு வந்துவிட்டதால் அந்த காட்சியை நேரில் பார்த்து ஆத்திரமடைந்தார். இதனால் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து கள்ளக்காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
    ×