search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iftar event"

    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகர இப்தார் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராம சுப்பு மற்றும் ராம்மோகன், அப்துல்லா யூசுப், பஷீர்முகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேல் வரவேற்றார்.

    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்.பி. திருச்சி வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், ஹிதாயத்துல்லா, பேராயர் எட்வர்ட்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பாக்யராஜ், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நரேந்திரதேவ், மாணவர் காங்கிரஸ் மாரிக்குமார், மாவட்ட பொதுச் செய லாளர் கணேசன், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் யாசர்கான், ஜாபர்அலி உஸ்மானி, த.மு.மு.க. பாஷித், தி.மு.க. மாநில பேச்சாளர் எம்.என். இஸ்மாயில், விழா கமிட்டியினர் கோதரி, ரஹ்மத்துல்லா, உமர்முன்னா, யூசுப், நவாஸ், சேயன் அரபாத், ஜேசுதாசன், செய்யது மசூது, சாகுல்ஹமீது, அன்சாரி, அருணாசலசாமி, இஸ்மாயில், அப்துல்காதர், பாதுஷா, பட்டு, சேயன்மைதீன், சாமி, சேக்கிழார் பாபு, குலாம், வரவேற்பு குழு தலைவர் அப்துல் காதர், அயூப்கான், ரெசவுமைதீன், ஷாஜகான், ரபீக், செய்குஒலி, அஸ்கத் அலி, ஹமீது, அஹமது, சிவபிரகாஷ், பிரகாஷ்ராஜ், அசாருதீன், அருள்ராஜ், ரகுமத்துல்லாஹ், அபுபூஸ்தாமி, பொன்ராஜ், யாசின், ஜலால், சாகுல்ஹமீது, ராகுல், சேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இப்தார் கமிட்டி செயலாளர் ஷாநவாஸ்கான் நன்றி கூறினார்.

    காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட உள்ள இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #Congress #IftarEvent #PranabMukherjee
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, இப்தார் விருந்து அளிக்க உள்ளார்.
     
    காங்கிரஸ் சார்பில் ஜூன் 13- ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடந்த 2015-ல் சோனியா காந்தி தலைவராக இருந்தபோது இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சி என்பதால், இதனை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இந்த விருந்தில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்தி வெளியானது.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கூறுகையில், இப்தார் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு நாங்கள் விடுத்த அழைப்பை பிரணாப் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் காங்கிரசின் எதிர்ப்பை மீறி பிரணாப் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க்து. #Congress #IftarEvent #PranabMukherjee
    ×