search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ibrahim Solih"

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி சந்தித்தார்.

    புதுடெல்லி:

    மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

    இந்தியா, மாலத்தீவு இடையே பல்வேறு முக்கிய துறைகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, 500 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவால் நிதி அளிக்கப்பட்ட கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டப்பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மாலத்தீவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முயற்சியாகும்.

    கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் தலைநகர் மாலேவை வில்லிங்கிலி, குல்ஹி பல்ஹு மற்றும் திலா புஷி ஆகிய தீவுகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 6.74 கி.மீ. நீளத்திற்கு பாலம் மற்றும் தரைப்பால இணைப்பு கட்டப்படும். இது குல்ஹி பல்ஹுவில் ஒரு துறைமுகத்தை உருவாக்க உதவும்போது மாலேயின் நெரிசலைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இந்தியா – மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் நிதியுதவியுடன் கூடிய இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசு ஏற்படுத்தியது. இந்த திட்டம் மாலத்தீவு பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும். ஏனெனில் இது வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும். அக்டோபர் 2020-ல் இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்காக மாலத்தீவுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிரத்யேகக் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

    இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிறப்பு மானியம் மூலம் இந்தியா இத்திட்டத்தை ஆதரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். "மாலியில் 4,000 சமூக வீடுகளைக் கட்டுவதற்கான திட்டங்களையும் மதிப்பாய்வு செய்தோம். 2,000 சமூக வீடுகளுக்கு நிதி உதவி வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவின் எந்தவொரு தேவை அல்லது நெருக்கடிக்கும் இந்தியா முதலில் உதவி செய்யும் நாடாக இருந்துவருகிறது, அது தொடரும்" என தெரிவித்தார்.

    இந்தச் சலுகைக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் சோலி, இந்தக் கூடுதல் நிதி மூலம் பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.

    ×