search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holiday for"

    • மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும்.
    • வரும் 1-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ந் தேதி மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து வரும் 1-ந் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது. அதற்கு அடுத்தவாரம் வழக்கம்போல ஏலம் நடைபெறும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

    • இடைத்தேர்தலையொட்டி 4 அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
    • அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைெபறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இடைத்ேதர்தலையொட்டி அரசு உத்தரவின் படி வரும் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான மதுபானக் கடைகளும்,

    வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

    மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும்  நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×