search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 days"

    • இடைத்தேர்தலையொட்டி 4 அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
    • அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைெபறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இடைத்ேதர்தலையொட்டி அரசு உத்தரவின் படி வரும் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான மதுபானக் கடைகளும்,

    வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

    மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும்  நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×