என் மலர்
நீங்கள் தேடியது "Hindu man"
- காலை 10 மணியளவில் தேயிலைத் தோட்டத்திற்குள் சடலத்தை உள்ளூர்வாசிகள் கண்டுள்ளனர்
- கொலை தேர்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தகவல்
வங்கதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்றும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டு உள்ளார். மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில், தேயிலை தோட்டத்தில் ரத்தன் சஹு வாகர்(வயது 28) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவர் கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பேசியுள்ள ரத்தன் சஹு வாகரின் சகோதரர்,
"முந்தைய இரவு முதல் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தோம். இன்று காலை, அவரது உடல் தோட்டத்தில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று அவரை அடையாளம் கண்டோம். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம்தான் மைமென்சிங் மாவட்டத்தில் 62 வயதான அரிசி வியாபாரி சுசென் சந்திர சர்க்கார் என்பவர் தனது கடைக்குள்ளேயே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
- தாக்குதல் சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இஸ்லாமிய பெண் ஹிஜாப்புடன் இருப்பதையும் உடன் இந்து மதத்தை சேர்ந்த நபர் இருப்பதையும் கண்டு ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
நண்பரை காப்பாற்ற முயன்ற பெண், அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர், அவரை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இருப்பினும் இளைஞரை அடித்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






