search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Annaiyar Munnani"

    • சிறப்பு வழிபாடை முன்னிட்டு எலுமிச்சைவேறு, வெட்டிவேறு, பச்சைகற்பூரம் ஆகியவை நிறைகுடம் தண்ணீரில் 3 நாளாக தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர்.
    • இப்படி செய்தால் திருமண தடை நீங்கும், நோய் நொடிகள் தீரும், வீடு சுபிட்சமாக இருக்கும், நாட்டில் நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கும் என்பது ஐதீகம்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மானாடு தண்டுபத்து பஞ்சாயத்துக்குட்பட்ட அரசர் பேட்டையில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் ஆலோசனை படி சிறப்பு வழிபாடு நடந்தது.

    தலைவி ராஜசிபா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வேல்கனி முன்னிலை வகித்தார். எலுமிச்சைவேறு, வெட்டிவேறு, பச்சைகற்பூரம், மஞ்சள்பொடி ஆகியவை நிறைகுடம் தண்ணீரில் 3 நாளாக தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு அதை எடுத்து வந்து விநாயக பெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த தண்ணீர் பிடித்து அவரவர்கள் வீடுகளில் தெளித்தனர்.

    இப்படி செய்தால் திருமண தடை நீங்கும், நோய் நொடிகள் தீரும், வீடு சுபிட்சமாக இருக்கும், நாட்டில் நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கி, வீடும் நாடும் முன்னேறும் என்பது ஐதீகம்.

    இந்நிகழ்சியில் துணைத்தலைவி பேச்சியம்மாள், செயலாளர் திருமணி, துனைசெயலாளர்கள் சக்திகனி, ராஜகன்னி மற்றும் வேல்கனி முத்துலட்சுமி ,வினிதா, முத்து மாலை, கலா, சத்தியபாமா, ஆறுமுககனி, முத்தம்மாள், கனகா, ராஜேஸ்வரி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • நைனாபத்து பஞ்சாயத்து அம்மன்புரத்தில் தலைவி சக்திகனி தலைமையில், துணைத்தலைவி செல்வலட்சுமி, பொதுச்செயலாளர் தங்கேஸ்வரி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது.
    • ராமாயணம், மகாபாரதம் மற்றும் பழங்கால புராண கதைகள், இந்துக்களின் எழுச்சி , இந்துக்களின் ஒற்றுமை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் கேசவன் ஆலோசனைப்படி உடன்குடி பகுதியில் 12 கிராமங்களில் இந்து அன்னையர்முன்னணி வார வழிபாடு நடைபெற்றது. நைனாபத்து பஞ்சாயத்து அம்மன்புரத்தில் தலைவி சக்திகனி தலைமையில், துணைத்தலைவி செல்வலட்சுமி, பொதுச்செயலாளர் தங்கேஸ்வரி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது. தைக்காவுரில் தலைவி சுயம்புக்கனி தலைமையிலும், பிச்சிவிளை ஊராட்சி புதூரில் தலைவி ரசீத்தா தலைமையில், செயலாளர் இசக்கியம்மாள் முன் னிலையிலும் நடைபெற்றது.

    வடக்கு தெருவில் தலைவி செல்வகுமாரி தலைமையில், பொதுச்செயலாளர் அமுதா, பொருளாளர் சுஜாதா முன்னிலையிலும், மாநாடு தண்டுபத்து ஊராட்சி அரசர் பேட்டை கிராமத்தில் தலைவி ராஜசிபா தலைமையில், துணைத்தலைவி பேச்சியம்மாள்,செயலர் சக்திகனி, பொதுச் செயலாளர் வேல்கனி முன்னிலையிலும் வழிபாடு நடந்தது.

    பரமன்குறிச்சிஊராட்சி முருகேசபுரத்தில் தலைவி செல்வி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்னபுஷ்பம் முன்னிலை வகித்தார். இதே ஊராட்சி வட்டன்விளையில் செயலாளர் செல்வி தலைமையில், செம்மறிகுளம் ஊராட்சி ராம சுப்பிரமணியபுரத்தில் துணைத்தலைவி மல்லிகா தலைமையிலும், செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, பத்ரகாளி, தங்க புஷ்பம் முன்னிலையில் வழிபாடு நடந்தது.

    கூட்டத்தில் வருகின்ற ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வைப்பது, தினசரி வீடுகளில் அம்மன் உருவச்சிலை வைத்து மஞ்சளால் அபிசேகம்செய்வது, அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி விரிவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பழங்கால புராண கதைகள், இந்துக்களின் எழுச்சி , இந்துக்களின் ஒற்றுமை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    • ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 101-வது வார வழிபாடு நடந்தது.
    • செம்மறிக்குளம் சத்யா நகரில் நடந்த வழிபாட்டிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் பஞ்சாயத்துக் குட்பட்ட ராமசுப்பிர மணிய புரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும்

    101-வது வார வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் தலைவி சூரியகலா, துணைத் தலைவி மல்லிகா, செய லாளர்கள் தமிழ்ச் செல்வி, பத்திரகாளி, துணைத்தலைவி சொர்ண மணி, ஒன்றிய தலைவி அமுதசுரபி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச் செயலா ளரும், இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப் பாளருமான கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் செம்மறிக்குளம் சத்யா நகரில் நடந்த வழிபாட்டிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
    • இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் ஊராட்சிக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், திருமண தடைகள் நீங்குவதற்காகவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்றும், பாரதநாடு செழிக்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிங்காரக்கனி, துணைத்தலை விமல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் தமிழ்ச்செல்வி அமுதசுரபி, பூஜா, பத்திரகாளி, லெட்சுமி சுயம்புகனி , ஒன்றிய செயலாளர் சித்ரா, மாவட்ட தலைவி சந்தனக்கனி, சத்யா ,நகர் தலைவி தங்க செல்வி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.பாரதீய ஜனதா செந்தூர்பாண்டி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    ×