search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை
    X

    இந்து அன்னையர் முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடந்த காட்சி.

    உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
    • இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் ஊராட்சிக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், திருமண தடைகள் நீங்குவதற்காகவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்றும், பாரதநாடு செழிக்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிங்காரக்கனி, துணைத்தலை விமல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் தமிழ்ச்செல்வி அமுதசுரபி, பூஜா, பத்திரகாளி, லெட்சுமி சுயம்புகனி , ஒன்றிய செயலாளர் சித்ரா, மாவட்ட தலைவி சந்தனக்கனி, சத்யா ,நகர் தலைவி தங்க செல்வி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளரும், இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.பாரதீய ஜனதா செந்தூர்பாண்டி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×