search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanged to death"

    • சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் காலனியை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மனைவி சிவகா மி. இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

    இவர்களுடைய ஒரே மகன் சிவகுமார் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கியிருந்து ஏதாவது ஒரு வேலைக்கு சென்று வந்தார்.

    சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடிப்பதற்கு தனது தாத்தா, பாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி சிவகுமார் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று இரவு மது குடிக்க பணம் கேட்டு தனது தாத்தா, பாட்டியிடம் சிவகுமார் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் சிவகுமார் தற்கொலை செய்து கொள்வ தாக கூறி வீட்டுக்குள் செ ன்று கதவை தாழிட்டுள்ளார்.

    அப்போது ஜன்னல் வழியாக அவரது உறவினர் ஒருவர் பார்த்தபோது அ ங்கு சிவகுமார் பீடி புகைத்து கொண்டு இருந்ததால் வழக்கம்போல் ஏமாற்றுகிறார் என நினைத்து விட்டனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று சிவகுமாரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிவகு மார் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை நாடகமாடி பணம் பெற்று மது குடிந்த வந்தவர் உண்மையில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி. இவர்களுக்கு ஹரிகரன் (வயது 21) பிரவின் குமார் (19) ஆகிய 2 மகன்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.

    இதையடுத்து பெரியநாயகியும் அவரது இளையமகன் பிரவின் குமாரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். ஹரிகரன் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிகரன் தற்கலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் பெரிய நாயகி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் கல்லறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் விக்னேஸ்வரன்(வயது17). இவர் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.

    குமாரவேலு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் விக்னேஸ்வரனும், அவரது தங்கையும் இருந் தனர். சிறிது நேரம் கழித்து விக்னேஸ்வரன் அதே பகுதியில் தனது நண்பர்களிடம் சகஜமாக பேசி விட்டு வீடு திரும்பினார்.

    வீட்டு மாடிக்கு சென்ற விக்னேஸ்வரன் வெகுநேரமாகியும் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த அவரது தங்கை மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை பலமாக தட்டிப்பார்த்தார். ஆனால் விக்னேஸ்வரன் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் மற்றும் விக்னேஸ்வரனின் நண்பர்களை அழைத்து வந்தார். அவர்கள் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விக்னேஸ்வரன் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே தூக்கில் இருந்து விக்னேஸ்வரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் விக்னேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×