என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர் தூக்கு போட்டு சாவு
    X

    கோப்பு படம்

    வாலிபர் தூக்கு போட்டு சாவு

    • புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி. இவர்களுக்கு ஹரிகரன் (வயது 21) பிரவின் குமார் (19) ஆகிய 2 மகன்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.

    இதையடுத்து பெரியநாயகியும் அவரது இளையமகன் பிரவின் குமாரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். ஹரிகரன் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிகரன் தற்கலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் பெரிய நாயகி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×