search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்வதாக மிரட்டி வந்த வாலிபர் தூக்குபோட்டு சாவு
    X

    தற்கொலை செய்வதாக மிரட்டி வந்த வாலிபர் தூக்குபோட்டு சாவு

    • சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் காலனியை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மனைவி சிவகா மி. இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

    இவர்களுடைய ஒரே மகன் சிவகுமார் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கியிருந்து ஏதாவது ஒரு வேலைக்கு சென்று வந்தார்.

    சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடிப்பதற்கு தனது தாத்தா, பாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி சிவகுமார் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று இரவு மது குடிக்க பணம் கேட்டு தனது தாத்தா, பாட்டியிடம் சிவகுமார் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் சிவகுமார் தற்கொலை செய்து கொள்வ தாக கூறி வீட்டுக்குள் செ ன்று கதவை தாழிட்டுள்ளார்.

    அப்போது ஜன்னல் வழியாக அவரது உறவினர் ஒருவர் பார்த்தபோது அ ங்கு சிவகுமார் பீடி புகைத்து கொண்டு இருந்ததால் வழக்கம்போல் ஏமாற்றுகிறார் என நினைத்து விட்டனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று சிவகுமாரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிவகு மார் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை நாடகமாடி பணம் பெற்று மது குடிந்த வந்தவர் உண்மையில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×