search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat court"

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாயை மாற்றியதாக பேசிய ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #Rahultoappear #defamationcase #ADCB
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டில் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடாக சுமார் 750 கோடி ரூபாயை மாற்றியதாக ராகுல் காந்தி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்பிரிவின்கீழ் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பிலும் அதன் தலைவர் சார்பிலும் கடந்த ஆண்டு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    எனவே, இந்த வழக்கு தொடர்பாக மே 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.கே. காத்வி இன்று சம்மன் அனுப்பியுள்ளார். #Rahultoappear #defamationcase #ADCB
    குஜராத்தில் கோர்ட்டில் சிறுத்தைப்புலி புகுந்ததால் இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்டம் சோட்டிலா நகரில் கோர்ட்டு உள்ளது. நேற்று கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை பிடிக்க முயன்றபோது அது கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அங்கும் இங்கும் ஓடியது. இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    சிறுத்தை கோர்ட்டில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்து கொண்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.

    அவர்கள் சிறுத்தையை பார்த்ததும் வெளியே ஓடி வந்து கதவை பூட்டி விட்டனர். 2 ஊழியர்கள் மட்டும் அங்கிருந்த மற்றொரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.

    உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த அறையின் ஜன்னலை உடைத்து 2 பேரையும் மீட்டனர்.

    அதன்பின் வனத்துறை அதிகாரிகள் கோர்ட்டு அறைக்குள் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

    ×