என் மலர்
நீங்கள் தேடியது "Govt Colleges"
- ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
- சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார் .
- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.
தாராபுரம் :
தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள கலைக்கல்லூரி தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ,மாவட்ட கலெக்டர் வினீத் , நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பிரபாவதி, மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாதன் ,ஒன்றிய செயலாளர் எஸ் .பி., செந்தில்குமார் ,நகர செயலாளர் தனசேகரன், மற்றும் தாராபுரம் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
- தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.
மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக்கல்லூரிகளும் உள்ளன.
கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகிறார்கள். முன்பு போல் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கும் நடைமுறை இப்போது கிடையாது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறுவதற்காக பி.காம் பாட பிரிவை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள். இதை சாதகமாக்கி பி.காம் படிப்பில் சேர ரூ.5 லட்சம் வரை சில கல்லூரிகளில் நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது.






