search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் அரசு கல்லூரி திறப்பு
    X

    அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குத்துவிளக்கேற்றி வைத்த காட்சி. 

    தாராபுரத்தில் அரசு கல்லூரி திறப்பு

    • சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார் .
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

    தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள கலைக்கல்லூரி தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ,மாவட்ட கலெக்டர் வினீத் , நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பிரபாவதி, மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாதன் ,ஒன்றிய செயலாளர் எஸ் .பி., செந்தில்குமார் ,நகர செயலாளர் தனசேகரன், மற்றும் தாராபுரம் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×