search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Institutions"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சென்னை:

    தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வேல்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 1358-ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி. தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

    எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் எம்.பி.கார்த்திகேயனை 9444221011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சா. இளவரசனை 6374160918 என்ற எண்ணிலும் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கோ.அசோக்கை 9025155455 என்ற எண்ணிலும் அணுகி புகார் கூறலாம்.

    காஞ்சிபுரம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பா.பாலமுருகனை 86672 22871 என்ற எண்ணிலும் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.திவ்யாவை 9952000256 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×