search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government employee killed"

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெரம்பூர்:

    பெரியமேடு என்.எச். ரோட்டில் குடியிருப்பவர் புருஷோத்தமன் (38). வேப்பேரி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி ஊழியர். இவருடைய மனைவி பெயர் சோனியா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சோனியா அதே தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுதிருமணத்துக்கு சென்று இருந்தார். புருசோத்தமன் அங்கு போய் மனைவி சோனியாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

    சோனியா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தெருவில் அலறி துடித்தார். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை புருசோத்தமன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை கண்டு மனைவி, குழந்தைகள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி அருகே பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினித்கிருஷ்ணன் (வயது 35). இவர் திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா குழந்தைகளுடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.

    வினித்கிருஷ்ணன் திண்டுக்கல்லில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்றார். கடந்த 6-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்தார். தோவாளையை அடுத்த நாக்கால் மடம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது ஓடும் பஸ்சில் இருந்து வினித் கிருஷ்ணன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் வினித்கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினித்கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான வினித்கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

    ×