என் மலர்
நீங்கள் தேடியது "Government Bus Service"
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
- கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம் தொடக்க விழா, வழித்தடப் பஸ்கள் நீட்டிப்பு மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ரெட்டியார்சத்திரத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. வேலுச்சாமி எம்.பி முன்னிலை வகித்தார்.
விழாவில் கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய வழித்தடப் பஸ்கள் விவரம், திண்டுக்கல்-– ஒட்டன்சத்திரம் (வழி -ரெட்டியார்சத்திரம், எல்ல ப்பட்டி, கட்டசின்னன்பட்டி, காமாட்சிபுரம், நரிப்பட்டி, பலகனூத்து, திருமலைராயபுரம், மூலச்சத்திரம்), திண்டுக்கல்-கன்னிவாடி(வழி-அம்மாபட்டி, மேலப்பட்டிபிரிவு, நடுப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி), திண்டுக்கல்-செட்டியப்பட்டி (வழி-பேம்பூர், தோமையார்புரம் பைபாஸ்), செம்பட்டி- – வத்தலகுண்டு(வழி-சித்தையன்கோட்டை, சித்த ரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி), ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் (வழி-மூலச்சத்திரம், திருமலை ராயபுரம், பலகனூத்து, நரிப்பட்டி, காமாட்சிபுரம், கட்டசின்னன்பட்டி, எல்லபட்டி, ரெட்டியார்சத்திரம்) ஆகிய புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள் விவரம், வத்தலகுண்டு –செம்பட்டி(வழி-பட்டிவீரன்பட்டி, அய்யம்பா ளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர்), திண்டுக்கல் – எஸ்.காமாட்சிபுரம்(வழி-வாணிவிலாஸ், கொட்டப்பட்டி), வேடசந்தூர் – திண்டுக்கல் (வழி-சீத்தமரம் நால்ரோடு, கரட்டுப்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்தனம்பட்டி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி) ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் நீட்டிப்பு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கன்னிவாடி – திண்டுக்கல் (தொடுதல் வழி-திப்பம்பட்டி, கசவனம்பட்டி, வெல்லம்பட்டி, கோனூர், குஞ்சனம்பட்டி, புளியராஜக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி) மற்றும் பூத்தாம்பட்டி-திண்டுக்கல் (தொடுதல் வழி-தாடிக்கொம்பு, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆத்தூர்் சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆத்தூர் செயல்பட்டு வருகிறது. தற்போது, ரெட்டியார்சத்திரத்தில் கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பா ன மனுக்களை இந்த அலு வலகத்தில் அளிக்கலாம். அந்த மனுக்களை அரசு அலுவலர்கள் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை மேற்கொ ள்வார்கள். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நானும் அடிக்கடி வந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற உறுதிதுணையாக இருப்பேன் என பேசினார்.
- 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை நேரங்களில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர்.
- மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம் ஊராட்சியில் 12 வார்டுக்கு உள்ளன. இதில் 6-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் எஸ். மேடூர், காரனூர், ராமேகவுண்டபுதூர், இலுப்பநத்தம், திம்மனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இதில் எஸ். புங்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளிக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை நேரங்களில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர்.
எனவே தினசரி காலை புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பஸ் மேலூர் பிரிவில் இருந்து மாதப்பன் நகர் வழியாக எஸ். புங்கம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி வழியாக செல்ல வேண்டுமென இப்பகுதி 6-வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். அதன் பலனாக எஸ்.புங்கம்பாளையத்துக்கு இன்று முதல் அரசு பஸ் தொடங்கியது.
புளியம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் 10 ஏ அரசு பஸ் 8.40 மணிக்கு எஸ். மேடூர் பிரிவுக்கு வந்தது. அங்கிருந்து மாதப்பநகர் வழியாக எஸ். புங்கம்பாளையம் அரசுப் பள்ளியை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்றது.
இவ்வழியாக 21 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையொட்டி நடந்த பஸ் தொடக்க விழாவில் 6-வது வார்டு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். காரமடை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி பஸ்சேவை தொடங்கி வைத்தார்.
இதில் மேட் டுப்பாளையம் போக்கு வரத்து கழக தொ.மு.ச. செயலாளர் சசிராஜ், தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் வேல்முருகன், துணை தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை
- எனவே திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் செய்தி வெளியானது.
இதனிடையே அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து சின்னாபட்டி, கொடைரோடு வழியாக நிலக்கோட்டைக்கு 32 தனி நடைகளும் என மொத்தம் 88 நடைகள் தடை இல்லாமல் நிலக்கோட்டை பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதில் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரவு 7, 7.45, 8.20, 8.45, 9.15, 9.25, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெ ற்றதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் இயக்கம் கடந்த மாதம் 30ந் தேதி முதல் திண்டுக்கல்லில் இருந்து இரவு. 7.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் இதேபோல திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு நிலக்கோட்டை சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் கூடுதலாக 4 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்ல போக்குவரத்து சதவீதத்திற்கு ஏற்ப பஸ் வசதி உள்ளது என தெரிவித்துள்ளனர்.






