என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl pregnancy"
- சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் முருகன்(வயது 32).கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இந்தநிலையில் இவருடைய பக்கத்து வீட்டில் உள்ள 16 வயது சிறுமியிடம் முருகன் ஆசை வார்த்தைகள் கூறி,கடந்த 6 மாதங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அது குறித்து விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருத்தங்கல்லில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
- இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் அந்த சிறுமிைய தேராம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த டாக்டர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 22), பரமசிவம் (44) ஆகிய 2 பேர் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்