search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Election 2019"

    2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.



    இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.



    ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

    உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



    இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர். 



    இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
    கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
    நாக்பூர்:

    நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும். மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    பேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன். பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.
    ×