என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Ration"

    • கணவர் ரேசன் பொருட்களை பெற்றோருக்கு வழங்க விரும்பியுள்ளார்.
    • இது தொடர்பாக மனைவியிடம் கூறும்போது இவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் ஷாகூர் கான் தனது மனைவி ரஹ்மத் (28), மகள் மர்யம் (8), மகன் யாசின் (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்த குடும்பத்தினருக்கு ரேசன் கடையில் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த இலவச பொருட்களை தனது பெற்றோருக்கு வழங்க ஷாகூர் கான் விரும்பினார். இது தொடர்பானக தனது விருப்பத்தை மனைவி ரஹ்மத்திடம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மனைவி ரஹ்மத் தனது மாமனார் மற்றும் அத்தைக்கு ரேசன் இலவசங்களை வழங்க விருப்பம் இல்லை என தனது கணவருடன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரஹ்மத் தனது கணவர் மீது கோபம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி தொட்டிக்குள் குதித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக தகவல்அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கான மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் ரஹ்மத்தின் கணவர் ஷாகூர், ஷாகூர் தந்தை மற்றும் தாயார், மேலும் இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்கலாம்.
    • மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்றால் பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது எனக் கூறும்.

    உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தற்போது நடைபெற்று வரும் செயல்பாட்டின்படி அதிக அளவு ரேசன் பொருட்கள் வழங்குவது தொடரும் என்றால், பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மக்களை திருப்திப்படுத்த மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்கலாம்.

    மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டால், பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது. இதனால் நிதி நெருக்கடி உருவாகும் எனத் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.

    மேலும், மாநிலங்களில் தொடர்ந்து ரேசன் கார்டுகளை வழங்கினால், அதற்கு மாநிலங்கள் பணம் கொடுக்குமா? என கேள்வி எழுப்பியது.

    மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "மத்திய அரசு கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை 80 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2012) கீழ் வழங்குகிறது என்றார்.

    எனினும் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் "சுமார் 2 முதல் 3 கோடி மக்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு வெளியில் உள்ளனர்" என்றார்.

    • 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமலில் உள்ளது.
    • இந்த திட்டத்தின்கிழ் 80 கோடி மக்களுக்கு சுமார் 122 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும்

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி வழங்க வழிவகை செய்யும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது,

    குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நீட்டிக்கப்பட்ட காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த திட்டத்தின்கிழ் 80 கோடி மக்களுக்கு சுமார் 122 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.44762 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×