search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for gambling with money"

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • 4 செல்போன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்தலையூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்ற ங்கரையோரம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெ றுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பி.மேட்டு ப்பா ளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் (53), அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த பூபதி (42), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (62), ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (23), ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்கிற காதர் (47), பவானி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (41), பவானி பகுதியை சேர்ந்த முத்து (41), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த அண்ணா துரை (62) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களி டமிருந்து சீட்டு கட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போ ன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பா ளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபூபக்கர் தலைமையிலான போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைராபா ளையம், நேதாஜி வீதி, ஓம் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள காலி இடடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வைராபாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (29), பன்னீர்செல்வம் (43), மருதமுத்து (55), வேலுசாமி (46), விஜய் (21), நவநீதன் (22), சந்திரன் (67), முருகேசன் (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1,460 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டது.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். 

    • காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை, திருவேங்கடம்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெருந்துறையில் இருந்து திருவேங்கடம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (55), பிரதீப் (27), சுந்தரமூர்த்தி (21), அஜித் (25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ. 2,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடி அடுத்த காரலவாடி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (45), குருசாமி (55), சாந்தப்பா (48), குருசாமி (40), சிவசங்கரா (42) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 700 பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கள்ளியங்காடு வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாடி கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), வாணிப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), சந்திரன் (38), டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (53), ராஜன் (39), ஆறுமுகம் (56) என தெரிய வந்தது.

    அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×