பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது

ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. 4 செல்போன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்தலையூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்ற ங்கரையோரம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெ றுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பி.மேட்டு ப்பா ளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் (53), அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த பூபதி (42), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (62), ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (23), ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்கிற காதர் (47), பவானி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (41), பவானி பகுதியை சேர்ந்த முத்து (41), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த அண்ணா துரை (62) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களி டமிருந்து சீட்டு கட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போ ன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் கருங்கல்பா ளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபூபக்கர் தலைமையிலான போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைராபா ளையம், நேதாஜி வீதி, ஓம் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள காலி இடடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தனர்.

போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வைராபாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (29), பன்னீர்செல்வம் (43), மருதமுத்து (55), வேலுசாமி (46), விஜய் (21), நவநீதன் (22), சந்திரன் (67), முருகேசன் (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1,460 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டது.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com