search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fodder shortage"

    • ருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
    • விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இச்சமயத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம் விதைப்பில் ஈடுபடுவர்.அதற்கேற்றாற் போல் பருவமழையும் பெய்யும். ஆனால் இம்முறை பருவமழை பொய்த்ததால், சோளம் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தில் கணிசமான அளவில் சோளம் சாகுபடி குறைந்திருக்கிறது என கூறப்படுகிறது.

    விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும். இதற்கு பயந்து பலரும் தங்களிடம் உள்ள கறவை மாடுகளை விற்க துவங்கியுள்ளனர்.இதுபோன்ற வறட்சி சமயங்களில், விவசாய நிலங்களில் மேற்கொள்ள வேண்டி பயிர் சாகுபடி முறை, நீர் மேலாண்மை, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற விஷயங்கள் தொடர்பான பயிற்சி, விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
    • ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.

    திருப்பூர் :

    விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×