search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால்  மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
    X

    கோப்புபடம். 

    சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

    • ருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
    • விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இச்சமயத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம் விதைப்பில் ஈடுபடுவர்.அதற்கேற்றாற் போல் பருவமழையும் பெய்யும். ஆனால் இம்முறை பருவமழை பொய்த்ததால், சோளம் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தில் கணிசமான அளவில் சோளம் சாகுபடி குறைந்திருக்கிறது என கூறப்படுகிறது.

    விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும். இதற்கு பயந்து பலரும் தங்களிடம் உள்ள கறவை மாடுகளை விற்க துவங்கியுள்ளனர்.இதுபோன்ற வறட்சி சமயங்களில், விவசாய நிலங்களில் மேற்கொள்ள வேண்டி பயிர் சாகுபடி முறை, நீர் மேலாண்மை, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற விஷயங்கள் தொடர்பான பயிற்சி, விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×