search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks sales"

    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி நடக்கிறது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பட்டாசு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.

    மேலும் பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்க ஒத்திகையை பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்குச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் பட்டாசுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பட்டாசுக்கடைகளில் விவரங்கள் பெறப்பட்டு, அவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அந்தந்தப்பகுதிக்கு உட்பட்ட அனைத்துப்பட்டாசுக்கடைகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது பட்டாசு விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட உரிமத்தை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும். அல்லது உரிமம் தெரியும்படி கடையின் முன்பாக தொங்க விட வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்தால் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    பண்ருட்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்னுபிரியா, ஜவ்வாதுஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிரசோதனை நடத்தினர்.

    அப்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் மளிகைகடை நடத்திவரும் குமார் (வயது 42) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×