என் மலர்
நீங்கள் தேடியது "federal"
பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தாயில்பட்டி:
சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமையில் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் வைரபிரகாசம், துணை செயலாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் விவசாய அணி செயலாளர் சந்துரு, மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் பட்டாசு ஆலை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சிவகாசி–சாத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமையில் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் வைரபிரகாசம், துணை செயலாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் விவசாய அணி செயலாளர் சந்துரு, மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் பட்டாசு ஆலை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சிவகாசி–சாத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அடியக்கமங்கலத்தில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்்க மத்திய அரசு காலம் கடத்தி தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இதனால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு துணை போகின்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மக்களை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தே.மு.தி.க.வினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மத்்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் பேசினார். முன்னதாக ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் முகமது சபீர்தீன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்்க மத்திய அரசு காலம் கடத்தி தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இதனால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு துணை போகின்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மக்களை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தே.மு.தி.க.வினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மத்்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் பேசினார். முன்னதாக ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் முகமது சபீர்தீன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.






