search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FATF"

    • பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது.
    • நைஜீரியா, தென் ஆப்பிரிக்காவை கிரே பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு.

    ஜோகனஸ்பெர்க்:

    பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடத் தவறியதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை சாம்பல் பட்டியலில் சேர்த்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    உலக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்த நாடுகள் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பல தொடர்புடைய சட்டங்களை இயற்ற தென் ஆப்பிரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பிரதிநிதித்துவம் செய்ய சமீபத்தில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கு அனுப்பப்பட்ட உயர்மட்டக் குழுவும் இதுவாகும்.

    முன்னர் வழங்கப்பட்ட பல பரிந்துரைகளில் தென்னாப்பிரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு ஒப்புக்கொண்டது, ஆனால் பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை அதிகரிப்பது, பறிமுதல் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    • பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது.
    • சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அண்டை நாடான பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது.

    பெர்லின்:

    பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு 27 நிபந்தனைகளை விதித்தது. அதன்பின், மேலும் 7 நிபந்தனைகளை விதித்தது.

    மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நிபந்தனைகளை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தங்கள் நாட்டை கிரே பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.

    கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.

    இந்நிலையில், நான்காவது ஆண்டாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.

    இறக்குமதி வரியை 200 சதவீதமாக உயர்த்திய நிலையில் அடுத்தகட்டமாக உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் உதவிகள் கிடைக்காத வகையில் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATF
    புதுடெல்லி:

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

    ‘பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி நேற்றிரவு அறிவித்தார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்துக்கு புல்வாமா தாக்குதலில் உள்ள தொடர்புகளை சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்ய இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

    கோப்புப்படம்

    மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் முக்கிய சீராய்வு ஆலோசனை கூட்டம் இன்றிலிருந்து வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் உரிய ஆதாரங்களுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது.

    இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு ஏற்கனவே பாகிஸ்தானை கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #PakistanMFNstatus  #WorldBank #FATF
    ×