search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers fear"

    • சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    8 வழி சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற் றனர்.தொடர்ந்து அவர்கள் கூறுகையில், செலம்-சென்னை 8 வழி சாலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும், எந்த நிலையிலும் 8 வழி சாலையை அமைக்க விட மாட்டோம், அதற்காக விவசாய நிலங்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    கூடலூர் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வன விலங்குகள் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக வெட்டுக்காடு, எல்கரடு, பலியங்குடி ஆகிய பகுதிகளில் பயிர்கள், வாழை, இலவ மரம், மாமரம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் அகழிகள் அமைக்க வேண்டும் அல்லது சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி ஆறு முதல் பலியங்குடி வரை அகழிகள் அமைக்கப்பட்டது. மேலும் எல்கரடு பகுதியிலும் அகழி அமைக்கப்பட்டது. தற்போது அவை மழையால் சேதமடைந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது.

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் கேரளாவில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் மீண்டும் இடம் பெயர்ந்து கூடலூர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. பலியங்குடி, மாவடி, வட்டதொட்டி ஆகிய இடங்களில் தொடர்ந்து யானை புகுந்து வருவதால் வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணையின் தடுப்பு சுவர் இடிந்தது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    நெல்லை:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்துள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் அணைகள் நிரம்பின. இந்த நிலையில் திருச்சி அருகே முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் அணை உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு தன்மைகளை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமநதி அணையின் தடுப்பு சுவர் இடிந்தது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தென்கால், வடகால் மூலம் 33 குளங்கள் பாசன வசதி பயன்பெறுகின்றன. மேலும் பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணைக்கு சுமார் 800 மீட்டர் அருகாமையில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பாறையை உடைக்க அடிக்கடி வெடி வெடிக்கப்படுகிறது.

    இதனால் ஏற்படும் அதிர்வு, அணைக்கரை வரை உணரப்படுவதால் அணைக்கரை, ‌ஷட்டர் பகுதி பலவீனமடைந்து வருகின்றன என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் அணையின் வெளிப்புறத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்து நீர் கசிவு காணப்படுகிறது. தற்போது அணை நிரம்பியுள்ளதால் நீரின் அழுத்தத்தால் விரிசல் விழுந்த பகுதிகளிலிருந்து நீர் பீறிட்டு பாய்கிறது. மேலும் பல இடங்களில் நீர் கசியத் தொடங்கியுள்ளன‌.

    அணை முழுவதும் நிரம்பியுள்ள நீர் வேகமாக வீசும் காற்றால் அணை சுவரில் பலமாக மோதுகிறது. இதனால் அணை சுவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அணைக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் கடையம், கோவிந்தபேரி, மேலக்கடையம், ராஜாங்கபுரம், அழகப்பபுரம், சம்பன்குளம், நீலமேகபுரம் உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் சூழல் ஏற்படும்.

    2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், தோப்புகள், 10க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அணையில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்த‌னர்.

    இந்த அணையில் 20 அடிக்கு மேல் மணல், பாறை கள் உள்ளது. இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக 2 முறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இந்நிலையில் அணையின் உள்பகுதியில் காற்றின் வேகத்தால் அலைகள் உக்கிரமாக எழும்புகிறது. இதனால் அணை பகுதியில் உள்ள ஓய்வறையின் தடுப்பு சுவரின் ஒரு பகுதி அரிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. இதையடுத்து அணை தடுப்பு சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அணை பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.



    ×