search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு- மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு- மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

    • சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    8 வழி சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற் றனர்.தொடர்ந்து அவர்கள் கூறுகையில், செலம்-சென்னை 8 வழி சாலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும், எந்த நிலையிலும் 8 வழி சாலையை அமைக்க விட மாட்டோம், அதற்காக விவசாய நிலங்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×