search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eruchi"

    • மதுரை மாநாட்டிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    சிவகாசி

    சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடை–பெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.–வேலுமணி, தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    மதுரை மாநாட்டில் விரு துநகர் இரண்டு மாவட்ட கழகம் சார்பாக ஆயிரக்க ணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு எடப்பாடியார் நன்மதிப்பை பெற்றுள் ளோம். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த காலம் தி.மு.க.வுக்கு இறங்கு முகம், அ.தி.மு.க.வுக்கு ஏறு முகம். ஆகவே நாளை ஆட்சி நமதே, எடப்பாடியார் முதலமைச்சராக போவது உறுதி.

    தி.மு.க.வுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. வருகின்ற தேர்தல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் உருவாக்கக்கூடிய தேர்த லாக அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு தி.மு.க. வினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறு கின்றனர். ஒட்டு மொத்த தமிழகமும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சரா வதை எதிர்நோக்கி காத்தி ருக்கிறது என்றார்.

    தலைமை நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய் யாத குற்றத்திற்காக அவரை தி.மு.க. அரசு பழி வாங்கியது. கொலை குற்ற வாளி போன்று போலீசார் தேடி னர். பொய் வழக்கு போடுவ தையே தி.மு.க. தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர் களுக்கு கழகப் பொதுச்செய லாளர் எடப்பாடியார் உறு துணையாக இருப்பார்.

    விரைவில் நாடாளு மன் றத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் விருது நகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகைசூடும். முன் னாள் முதலமைச்சர் எடப் பாடியார் மீண்டும் முதல மைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெ ரிய எழுச்சியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திர பிரபா முத்தையா, சிவசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன் பத்தமிழன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானு ஜம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளி ரணி செயலாளர் சுபாஷினி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி,

    சிவகாசி ஒன்றிய முன் னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரம ணியம், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்ப சாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.

    ×