search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ernavur Narayanan"

    • மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், சென்னையில் பொது மக்களுக்கு 50 - க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், உபகரண பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நங்கநல்லூர் நேரு ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராயபுரம் ஜி. ஏ. ரோட்டில் அமைந்து உள்ள காமராஜர் சிலை, திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து காமராஜர் சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள சிலைக்கு இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் 121 கிலோ எடை கொண்ட மெகா லட்டு பெருந்தலைவர் இல்லத்தில் படைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பழனி முருகன், மாவட்ட பொருளாளர் மனோகரன் ஏற்பாட்டில் கார்த்திக் நாராயணன் அன்னதானம் வழங்கினார். எழில் நகர் நாடார் பேரவை சார்பில் காமராஜர் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கினார்.

    • தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அண்ணாசிலை அருகே கீரை வியாபாரம் செய்து வந்த ஜெயகணேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • இந்நிலையில் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், உயிரிழந்த ஜெய கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அண்ணாசிலை அருகே கீரை வியாபாரம் செய்து வந்த ஜெயகணேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்நிலையில் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், உயிரிழந்த ஜெய கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தை களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.

    அப்போது சமத்துவ மக்கள் கழகம் மாநில பொரு ளாளர் வக்கீல் கண்ணன், மாவட்ட செய லாளர் மாலைசூடி அற்புத ராஜ், நாடார் பேரவை தூத்து க்குடி வடக்கு மாவட்ட தலைவர் பரம சிவன், தெற்கு மாவட்ட தலை வர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட அவைத்தலைவர் கண்டி வேல், பொருளாளர் பழனி வேல், துணை செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், முத்துக்குமார், மாநகர செயலாளர் உதய சூரியன், வர்த்தக அணி செய லாளர் சிவசு. முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.
    • திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    3 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இதனால் நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.

    ஏழை, நடுத்தர வர்த்தகத்தினர் மாத பட்ஜெட் மேலும் எகிரும் வாய்ப்பு உள்ளன. எனவே ஒன்றிய அரசு கேஸ் விலை உயர்வை உடனயாக திரும்பப் பெற வேண்டும். திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவொற்றியூர்:

    தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×