search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eriyodu"

    எரியோடு அருகே பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எரியோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

    இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.

    எரியோடு அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான அலுவலர்கள் எரியோடு மற்றும் தொட்டணம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் அதிக பாரங்கள் ஏற்றி வந்ததும், வரி செலுத்தாமலும், பதிவுச் சான்று புதுப்பிக்காமலும் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 2 லாரிகளுக்கும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நிலக்கரி ஏற்றிக் கொண்டு சங்ககிரி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதிலும் கூடுதல் பாரம் ஏற்றி வந்தது தெரிய வரவே ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை சரியான காலக்கெடுவுக்குள் புதுப்பித்து விதிகளை பின்பற்றி ஓட்டுமாறும் விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    எரியோடு அருகே உள்ள கருங்கல் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    எரியோடு:

    எரியோடு அருகே நாகையகோட்டை ஊராட்சி வைவேஸ் புரத்தில் கிழக்கு கருங்கல் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையானது 1986-ம் ஆண்டு கட்டப்பட்டது. 6 ஏக்கர் 97 செண்ட் பரப்பளவு கொண்டது.

    இதற்கு அருகில் உள்ள தொப்பையசாமி மலையில் இருந்து நீர் வருகிறது. இந்த தடுப்பணை மூலம் சுற்றியுள்ள 400-க்கும் மேற்பட்ட கிணறுகள் மூலம் விவசாயிகள்பாசனம் செய்து வருகின்றனர். தற்போது தடுப்பணையானது சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் கூறினர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வந்து பார்வையிட்டு சீரமைப்பதாக கூறி சென்றனர். ஆனால் அதன்பிறகும் அதிகாரிகள் சீரமைக்காததால் தடுப்பணையில் தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி அருகில் உள்ள குளத்தில் கலக்கிறது.

    இதனால் கோடை மழை பெய்தும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×