என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ENGINEER COLLEGE"
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
- தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
நாசரேத்:
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமண்டலகுருத்துவ செய லாளர் இம்மானுவேல்வான் ஸ்டக், திருமண்டல'லே' காரியதரிசி கிப்ட்சன், திருமண் டல உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தா ளாளர் ஜாண்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாசரேத் சேகர கமிட்டி உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது
- மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ஐ.சி.டி. அகாடமியுடன் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டது.
ஐ.சி.டி. அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து மத்திய அரசின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்க உதவும் ஒரு அமைப்பாகும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயிற்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, ஐ.சி.டி. அகாடமி ஆசிரிய மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு, டிஜிட்டல் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆகிய துறைகளில் 7 தூண் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம், மெக்கா–னிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், ஏரோநாட்டிகல் என்ஜினீ–யரிங், ஏரோஸ்பேஸ்என்ஜி–னீயரிங் மற்றும் ரோபா–ட்டிக்ஸ் மற்றும்ஆட்டோ–மேஷன் என்ஜினீய ரிங் மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாண–வர்களுக்கு ஆட்டோ–கேட் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்வ–ழங்கப்ப–டுகிறது.
இப்பயிற்சி மாணவ–ர்களுக்கு புராஜக்ட் ஒர்க் மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உதவுகிறது. மேலும், பேராசிரி யர்களு–க்கு ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி புராஜக்ட் மேற் கொள்ள ஏதுவாக அமைகிறது. இப்பயிற்சி, மாணவர்களை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, அவர்களை ஆட்டோடெ–ஸ்க்சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களா–கமாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் இந்த பயிற்சியின் மூலம் பயன–டைவார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வேந்தர் சீனிவாச–னிடமிருந்து கல்லூரி முதல்வர்இளங் கோவன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்