search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ஐ.சி.டி. அகாடமியுடன் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டது.

    ஐ.சி.டி. அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து மத்திய அரசின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்க உதவும் ஒரு அமைப்பாகும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயிற்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, ஐ.சி.டி. அகாடமி ஆசிரிய மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு, டிஜிட்டல் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆகிய துறைகளில் 7 தூண் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம், மெக்கா–னிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், ஏரோநாட்டிகல் என்ஜினீ–யரிங், ஏரோஸ்பேஸ்என்ஜி–னீயரிங் மற்றும் ரோபா–ட்டிக்ஸ் மற்றும்ஆட்டோ–மேஷன் என்ஜினீய ரிங் மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாண–வர்களுக்கு ஆட்டோ–கேட் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்வ–ழங்கப்ப–டுகிறது.

    இப்பயிற்சி மாணவ–ர்களுக்கு புராஜக்ட் ஒர்க் மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உதவுகிறது. மேலும், பேராசிரி யர்களு–க்கு ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி புராஜக்ட் மேற் கொள்ள ஏதுவாக அமைகிறது. இப்பயிற்சி, மாணவர்களை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, அவர்களை ஆட்டோடெ–ஸ்க்சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களா–கமாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் இந்த பயிற்சியின் மூலம் பயன–டைவார்கள்.

    புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வேந்தர் சீனிவாச–னிடமிருந்து கல்லூரி முதல்வர்இளங் கோவன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×