என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Dead"

    • ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது.
    • இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பல குழுக்களாக சுற்றி வருகிறது. குன்னூர் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    நேற்று மாலை மலைச்சரிவில் சென்ற கர்ப்பிணி யானை கால் இடறி தவறி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே யானை பலியானது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்தது.

    இதை பார்த்த பழங்குடி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்க முயன்றனர்.

    அப்போது ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது. இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.

    சுமார் 2 மணி நேரம் போராடி அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த யானையின் உடலை பரிசோதனை செய்த பிறகு அந்த இடத்திலேயே புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து சுற்றி வருவதால் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
    • நள்ளிரவு மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
    • வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பெண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த யானை திடீரென பாறை சறுக்கி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதனுடன் பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதையடுத்து வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பலியான யானையுடன் மேலும் சில யானைகள் இருந்துள்ளன. யானை பள்ளத்தில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் தூரத்தில் நின்றபடி வேதனையுடன் பார்த்துள்ளன. இதனால் அந்த யானைகள் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    கோவை அருகே உடல் நலக்குறைவுடன் சுற்றி திரிந்த குட்டி ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.
    கவுண்டம்பாளையம்:

    பெரியநாயக்கன்பாளையம் வனசரகம் தடாகம் காப்புக்காடு சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி அருகே உள்ள சிறிய பள்ளத்தில் கடந்த 6-ந்தேதி 7 வயதான குட்டி ஆண் யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    உடனடியாக வனசரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கோவனூர் கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதை தொடர்ந்து யானை தானாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    நேற்று காலை பூச்சியூர் கிரீன் கார்டன் அருகே உள்ள வனப்பகுதிக்குள் அந்த குட்டியானை வந்தது. நடந்து வந்து கொண்டிருந்த யானை திடீரென மயங்கி கீழே விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் கால்நடை டாக்டர்களுடன் விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டு, யானைக்கு செலுத்தப்பட்டது. மேலும் வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் யானைக்கு உணவாக கொடுத்தனர். ஆனால் யானையால் எழுந்திருக்கவே முடியவில்லை. இருப்பினும் யானையை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

    நேற்று காலை தொடங்கிய சிகிச்சை இன்று காலை வரை விடிய, விடிய நடந்தது. ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி 7 வயது ஆண் குட்டி யானை இறந்து விட்டது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உயர் அதிகாரிகளும், வனத்துறையினர் உடனடியாக யானை இறந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை டாக்டர்கள் யானையை உடற்கூராய்வு செய்யும் பணியை தொடங்கினர். உடற்கூராய்வு செய்த பின்னரே யானை எப்படி இறந்தது, இறந்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
    மொரப்பூர் அருகே யானை சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே காப்புக்காடு பகுதியில் கடந்த மாதம் 25-ந்தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதுபற்றி பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

    கால்நடை மருத்துவர் பிரகாஷ் அங்கு வந்து யானையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது யானை குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், யானை சுடப்பட்டு செத்து கிடந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முனிராஜ் (வயது 29), திருப்பதி மகன் மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஜெயவேல் (55) என்பவரையும் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    ×