என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 3 person jail
நீங்கள் தேடியது "3 person jail"
மொரப்பூர் அருகே யானை சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே காப்புக்காடு பகுதியில் கடந்த மாதம் 25-ந்தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதுபற்றி பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
கால்நடை மருத்துவர் பிரகாஷ் அங்கு வந்து யானையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது யானை குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், யானை சுடப்பட்டு செத்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முனிராஜ் (வயது 29), திருப்பதி மகன் மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஜெயவேல் (55) என்பவரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே காப்புக்காடு பகுதியில் கடந்த மாதம் 25-ந்தேதி 22 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. இதுபற்றி பாலக்கோடு வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
கால்நடை மருத்துவர் பிரகாஷ் அங்கு வந்து யானையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது யானை குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், யானை சுடப்பட்டு செத்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முனிராஜ் (வயது 29), திருப்பதி மகன் மணி (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஜெயவேல் (55) என்பவரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X