என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic"

    • நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும்.
    • 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட்பட) நாளது தேதி வரை 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கான காலக்கெடு முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, நாளது தேதி வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இ-சேவா மற்றும் பொது சேவைமையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள் : ஆதார் எண், பி.பி.ஓ.,எண், வங்கி கணக்கு எண் மற்றும்செல்போன் ஓ.டி.பி., அளிக்க வேண்டும் என கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    • பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் கல்வியறிவு என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருநாள் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழகம், மாவட்ட திறன் பயிற்சி மையம் மற்றும் தேசிய தகவலியல் மையம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் பிராங்கிளின் திட்டவிளக்க உரையாற்றினார். திட்ட உதவி அலுவலர் சாமதுரை மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்தார்.

    பயிற்சியினை தேசிய தகவலியல் மைய இயக்குனர் ஆறுமுகநயினார், மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு திட்ட தேசிய உறுப்பினர் வரதராஜ் ஆகியோர் நடத்தினர்.

    பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

    சிவகங்கை

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் (பகிர்மானம்) தலைமையில் காரைக்குடி கோட்டத்தில் நடைபெறுவதால் அக்கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×