என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric pole damage"

    • குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன.
    • ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காண ப்பட்டது. பிறகு மாலையில் வெப்பம் தணிந்து மழை பெய்வதற்கான சூழல் காணப்பட்டது. மாவட்ட த்தின் பல பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்தநிலையில் நேற்று கம்பம் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நகரின் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள கழிவுநீரோடை நிரம்பி சாலையில் வழிந்தோடியது. இதேபோல கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கூரைகள், தகரங்கள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்திரா குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்க ப்பட்டது. இதையடுத்து ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி இருட்டில் மூழ்கியது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது அரசம்பட்டி கிராமம். இப்பகுதியில் சாலையோர மின்கம்பங்கள் பல உள்ளன. இந்நிலையில் அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் சாலையில் உள்ள காந்திபுரம் என்ற பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் இரவு 7 மணி அளவில் கரடுமுறடாக வந்த லாரி ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதனால் மின்கம்பம் இரண்டாக முறிந்து மின் வயர்கள் அருந்து கீழே விழுந்தன. மின்கம்பம் முறிந்தது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் இரவு நேரம் முழுவதும் அப்பகுதியே இருட்டில் மூழ்கியது. 

    இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி எந்த பகுதியை சேர்ந்தது. இங்கு எதற்காக நிருத்தப்பட்டது என்று பாரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×