search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elections victory"

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிமுகம் காட்டிவரும் நிலையில் இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் மிக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘அபரிமிதமான இந்த வெற்றிக்கு பாஜகவை வழிநடத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    பாஜகவின் கொள்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷாவும் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் அபாரமான முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

    பன்முகத்தன்மைகளை கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில் இவ்வளவு வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்தமைக்காக வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட முகமைகளுக்கு வாழ்த்துக்கள். ஒளிமயமான எதிர்காலத்துடன் நமது உயர்ந்த நாடு ஆசீர்வதிக்கப்படுவதாக!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×