search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elder brother"

    மது குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சகோதரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவருக்கு பிரதாப் (வயது29), பிரதீஷ் (24) ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    பிரதாப்புக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த பிரதாப் மது குடித்து விட்டு வந்து தாயாரிடம் ஏன் மீன் குழம்பு வைக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார். இதேபோல் அவரது தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் பிரதீசுக்கும், பிரதாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று நள்ளிரவு மதுகுடித்து விட்டு வந்து பிரதாப் வீட்டு திண்னையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீஷ் சகோதரரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார்.

    இதனால் உடல் கருகிய பிரதாப் வலியால் அலறி துடித்தார். அவரது கூக்குரல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிரதாப்பை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செட்டிநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபு வழக்குப்பதிவு செய்து பிரதீசை தேடி வருகிறார்.
    மரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.

    ×