search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eco-Friendly"

    • சத்யா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி. எஸ்.இ. பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சத்யா வித்யாலயா பள்ளி குழுமத் தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி மருத்துவர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் அனுசுயா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பழைய சென்னாக்குளம் கிராமத்தில் மரங்கன்றுகள் நடப்பட்டது.

    • சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியும், துணிப்பைகளை (மஞ்சப்பை) பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், பேரூர் கழக செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் விவேகா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி வலம் வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

    பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் (மஞ்சப்பை) துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தி பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், 18 வார்டு கவுன்சிலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×