search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "East Asia Summit"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது
    • இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது

    ஏசியன் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் 20-வது ஏசியன்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய மாநாடு இந்தோனேசியாவில் இன்று நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோ அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியாவுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றடைந்த மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் மோடி, தான் தங்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை அசைத்தும் மோடியுடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கலைக்குழுவினர் நடனமாடி மோடியை வரவேற்றனர். இந்தோனேசியாவுக்கு சென்றடைந்ததும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜகா்த்தாவுக்கு சென்றடைந்துள்ளேன். ஏசியன் தொடர்பான கூட்டங்களை எதிர்நோக்கி இருக்கிறேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.

    பின்னர், இன்று காலை நடந்த 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெருமை. உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நமது (இந்தியா-இந்தோனேசியா) கூட்டான்மை நான்காவது சகாப்தத்தில் நுழைகிறது.

    கடந்த ஆண்டு நாங்கள் இந்தியா-ஏசியன் நட்பு தினத்தை கொண்டாடி விரிவாக கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும், ஆசியாவையும் ஒன்றிணைக்கிறது.

    அதனுடன் நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு, பல்முனை உலகின் நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியா உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன் முயற்சியிலும் இந்த பகுதி முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த ஆண்டின் கருப்பொருளாக ஏசியன் விஷயங்கள் உள்ளன. அது வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏசியன் கூட்டமைப்பு முக்கியமானது.

    இங்கு அனைவரின் குரல் கேட்கப்படுகிறது. ஏனென்றால் 2-வது வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது.

    21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நம் அனைவரின் நூற்றாண்டு. கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை உருவாக்குவது மற்றும் மனித நலனுக்காக அனைவரின் முயற்சிகளை உருவாக்குவது நம் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
    • ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுவதால் பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார்.
    • இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவதால், பிரதமர் மோடி நாளை மாலை இந்தியா திரும்புகிறார்.

    இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 7) மாலையே இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால், இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை தனியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    • குறுகிய கால பயணம் என்பதால் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு இல்லை
    • நாளை இரவு இந்தோனேசியா புறப்பட்டு, நாளைமறுநாள் மாலை இந்தியா திரும்புகிறார்

    இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

    இதற்காக நாளை இரவு இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, 7-ந்தேதி மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், குறுகிய பயணமாக இது அமைந்துள்ளது. இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏசியன் (ASEAN) அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் உள்ளன.

    கடந்த சில வருடங்களாக வணிகம், முதலீடு, பாதுகாப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியா-ஏசியன் இடையிலான உறவு அதிகரித்துள்ளது.

    மோடி, 10 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இந்தியா- ஏசியன் கடல்சார்ந்த பாதுகாப்பு ஒத்த்துழைப்பு குறித்து புதிய முயற்சி உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    முதலில் 20-வது ஏசியன்-இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டபின், 2-வதாக 18-வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    ஆசிய பிராந்தியத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்ததாக ஏசியன்-இந்தியா திகழ்கிறது.

    ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். #PMModi #ASEAN2018 #EastAsiaSummit
    சிங்கப்பூர்:

    ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    13-வது கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.



    பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடி, சிங்கப்பூர் நிதி நிறுவனமான ஃபின்டெக் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி - அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #ASEAN2018 #EastAsiaSummit 

    ×