ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவதால், பிரதமர் மோடி நாளை மாலை இந்தியா திரும்புகிறார்.
ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 7) மாலையே இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால், இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை தனியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com