search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water scheme"

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்.

    சி.என்.அண்ணாதுரை, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மு.பெ.கிரி (செங்கம்), வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபார திமனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராசுக்குட்டி, ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும்.
    • தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மைப்பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க அரசாணையின்படி மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.பி.ஐ. நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் முத்தையன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் முருகையன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவரை திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மண்டல வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது கவுன்சிலர்கள் கண்ணப்பன், தங்கராஜ், தமிழ்செல்வி கனகராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    • குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது.
    • முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது. தற்போது அனைத்து கிராமங்களிலும் அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில் ஏற்காடு ஊராட்சியில் உள்ள கோவில் மேடு பகுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்காடு ஊராட்சி மற்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    அதே போல் ஏற்காடு வேலூர் ஊராட்சியில் உள்ள 2-வது வார்டில் வேலூர் ஊராட்சி கவுன்சிலர் சின்ன வெள்ளை, வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி மற்றும் ஏற்காடு தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் சின்னவெள்ளை ஆகியோர் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர். 

    ×