search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water lakes"

    வறண்டு கிடந்த 4 குடிநீர் ஏரிகளிலும் 2 நாள் மழையின் காரணமாக மொத்த குடிநீர் கையிருப்பு 4530 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. #SholavaramLake #PuzhalLake
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரிக்கு நேற்று 139 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 169 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி நீர் இருப்பு 373 மில்லியன் கனஅடியில் இருந்து 384 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரி சுற்று வட்டார பகுதிகளில் 24 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    புழல் ஏரிக்கு நேற்று 160 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 196 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 1133 மி.கன அடியில் இருந்து 1143 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.

    செம்பரம்பாக்கம் பகுதியில் மழை இல்லாததால் நேற்று 179 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 41 கனஅடியாக குறைந்துவிட்டது. ஏரியில் 206 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சோழவரம் ஏரி பகுதியில் போதிய மழை பெய்யாததால் இன்று தண்ணீர் வரத்து இல்லை. ஏரியில் 40 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    வறண்டு கிடந்த 4 குடிநீர் ஏரிகளிலும் மழையின் காரணமாக மொத்த குடிநீர் கையிருப்பு 4530 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.  #SholavaramLake #PuzhalLake

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #ChennaiRain
    திருவள்ளூர்:

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

    தொடர்ந்து வரும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.


    சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1058 மில்லியன் கன அடி உள்ளது. ஏரிக்கு 460 கனஅடி தண்ணீர் வருகிறது. 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கடந்த 19-ந்தேதி புழல் ஏரியில் 1005 மில்லியன் கன அடி இருந்தது. மழை காரணமாக தற்போது 2 நாட்களில் 53 மில்லியன் கனஅடி உயர்ந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கனஅடி. தற்போது 194 மி. கனஅடி தண்ணீர் உள்ளது.

    ஏரிக்கு 230 கனஅடி தண்ணீர் வருகிறது. 45 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் 363 மில்லியன் கன அடி பதிவானது. (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி) 266 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சோழவரம் ஏரியில் வெறும் 30 மி.கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்த கொள்ளளவு 1089 மி.கனஅடி) 69 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பருவ மழை மேலும் தீவிரம் அடையும் என்று கூறப்படுவதால் ஏரிகளின் நீர் மட்டம் வரும் நாட்களில் கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiRain
    ×