search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Office"

    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் 65 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் 65 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு 65 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மானூர் ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அலீப் மீரான், அறங்காவலர் குழு உறுப்பினர் வெயிலப்பன் மற்றும் நிர்வாகிகள் முகமது அலி, வசந்தி முருகேசன், வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, இளைஞரணி மணிகண்டன், ராஜா முகமது, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் திருப்பூர் சாலையில் தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் வரவேற்றார்.காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் மோகனசெல்வம், ஒன்றிய செயலாளர்களான வெள்ளகோவில் சந்திரசேகரன், சென்னிமலை கிழக்கு பிரபு, மூலனூர் பழனிசாமி, குண்டடம் கிழக்கு சிவசெந்தில்குமார், மேற்கு சந்திரசேகர், நகர செயலாளர்களான காங்கயம் வசந்தம் சேமலையப்பன், வெள்ளகோவில் சபரி முருகானந்தம், மூலனூர் தண்டபாணி, கன்னிவாடி சுரேஷ் மற்றும் யூனியன் கவுன்சிலர்களான சந்தானலட்சுமி, அருண் தீபக், பழனாத்தாள் மாரிமுத்து, சிவன்மலை ஊராட்சி துணை தலைவர் சண்முகம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலர் சிவகுமார், வீரணம்பாளையம் ஊராட்சி தலைவர் உமாநாயகி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவனாந்தன் நன்றி கூறினார். 

    • தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார்.
    • விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சீவலமுத்து குமார் தொகுத்து வழங்கினார். யூனியன் சேர்மன்கள் அம்பை பரணிசேகர், சேரன்மகாதேவி பூங்கோதை குமார், நகர்மன்ற தலைவர்கள் அம்பை பிரபாகரன், வி.கே.புரம் செல்வ சுரேஷ் பெருமாள், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    ×