search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Special Sale"

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலெக்டர் பா.முருகேஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.

    கோ ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் சுமார் 174.10 கோடிக்கு விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ட்வில் வீவ் ஆயத்த ஆடைகள், காம்பிரே ஆயத்த ஆடைகள், ஸ்லவ் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்சன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை புதிய வரவுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு 91 லட்ச ரூபாய் விற்பனை செய்த பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    56 சதவீதம் கூடுதல் பலன் கிடைப்பதால் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் 30 சதவிகித தள்ளுபடியில் வட்டியில்லா கடன் வசதியை பெற்று பயன்பெறலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும் என கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து தெரிவித்தார்.

    இதில் விற்பனை மேலாளர் தணிகைவேலு, குமரவேல், நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகள் கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் மேலாளர் ஞானபிரகாசம், விற்பனை மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லா கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. துணி ரகங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பதி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3 1/2 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×