search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை
    X

    வேலூர் தீபம் கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். அருகில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா.

    வேலூர் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

    • 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகள் கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் மேலாளர் ஞானபிரகாசம், விற்பனை மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லா கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. துணி ரகங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பதி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3 1/2 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×