என் மலர்
நீங்கள் தேடியது "Director Nelson Dilip Kumar"
- ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். மேலும் இந்த வரிசையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நெல்சன் ஜெயிலர் 2 குறித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது "நான் படக்கதையை எழுதியவரை நன்றாக இருக்கிறது. ஜெயிலர் 2 கதையாக நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது. மக்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.
படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்
- சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
- இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இவருடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டெஸ்ட் ஷூட் இன்று படக்குழு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு சட்டை மற்றும் லுங்கியுடன் காணப்படுகிறார். இயக்குநர் நெல்சனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் மற்றும் நடிகர் கவின் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கின்றனர்.ஆண்டிரியா மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும்.
தமிழ் திரைத்துறையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கடைசியாக ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார்.
அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் Filament Pictures என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் பங்களித்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது நிலையான விருப்பமாக இருந்து வருகிறது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Filament Pictures-ல், பரந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.
எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
மே 3ஆம் தேதி எங்களின் முதல் திட்ட அறிவிப்புக்காக காத்திருங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






